ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒரு பிரச்சனை மையம் கொண்டு, தமிழகத்தைப் பரபரப்பாக்கும். ஹிந்தி எதிர்ப்பும்,ராஜீவ்காந்தி படுகொலையும்,ஈழ இனப் படுகொலையும் தமிழகத்தில் அவ்வப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.இன்று மது எதிர்ப்பு மையம் கொண்டு அரசியலிலும்,சமூகவியலிலும் மாற்றங்களுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிகையல்ல!.அய்யா சசிபெருமாளின் இறப்பு,நந்தினி போன்ற மாணவர்களின் தொடர் போராட்டங்கள்,அரசியல் வாக்குறுதிகள் போன்றன மது ஒழிப்புக்கான போரை வேகப்படுத்தியிருக்கின்றன!.அந்த யுத்த களத்திற்கான கூர்வாளாக 'அலையும் குரல்கள்'கவனம் பெறுகிறது!