வியாழன், 7 ஏப்ரல், 2016

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

         தேர்தல் களம் அனல் பறக்கிறது! தனிமனிதச் சாடல்களும்,தனக்கு இணங்காத அணியைச் சீர்குலைக்கும் ராஜ தந்திரங்களும்?!! எதேச்சாதிகாரங்களும் ,கட்சிகளுக்குள்ளே நடக்க இருக்கும் உள்குத்து அநாகரீகங்களும் இன்னும் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகி ஊடங்களுக்குத் தீனி போடும்!...போகப்போக அரசியல் வானில் வறண்ட வானிலையே காணப்படும்.!

ஆட்சி அமைக்கப் போவது யார்?..எந்தக்கூட்டணி..!? இந்தக் கேள்விக்கு மே 16க்குப் பிறகே விடை தெரியும்.

வரப்போகிற ஆட்சி என்ன செய்ய வேண்டும்..? அது ஆண்டுகொண்டிருக்கிற, ஏற்கனவே ஆண்ட, அல்லது புதிய கூட்டணிகள்...எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்..! இனியாவது  தமிழகம் உருப்பட என்ன செய்ய வேண்டும்..?..அனைவரும் இந்த இலக்கை நோக்கிச் சிந்திப்போம்!