வடம்பிடிப்போம்!வள்ளுவத் தேரை!
ஓர்நாட்டு மாந்தருக்காய்ப் பாட வில்லை!
உலகத்தின் உயர்வுக்காய் எண்ணிச் செய்தான்!
கார்பொழியும் மேகமென காற்றைப் போல
காலமது உள்ளமட்டும் மனிதம் வாழ!
வேரெனவே ஊன்றிவிட்டான் புனிதம் காக்க!
வெகுண்டெழுந்தான் புவியிலுள்ள கயமை மாய்க்க!
ஊர்க்கூடித் தேரிழுப்போம் வாரீர்! வாரீர்!
உலககெங்கும் பொதுமறையின் புகழைக் காக்க!