புதன், 17 டிசம்பர், 2014

பாரதி வாழ்க!

அறுசீர் விருத்தம் ( என்னுள் கவியார்வத்தைத் தூண்டிய 'ஊமைக்கனவுகள்'..ஜோசப் விஜூ அய்யாவிற்கு நன்றி..!)

          பாரதி வாழ்க! வாழ்க!

            
அடங்கிடாக் காளை யென்றே

             ஆர்ப்பரித் தெழுந்து சீறி 

         முடங்கியே கிடந்தி ருந்த 

             மொழியினைச் சிகரம் ஏற்றிச் 

         சடங்கினை முட்ட றுத்துச்

             சமமென வாழ்ந்து காட்டித் 

         தடம்தனைப் பதித்துச் சென்ற 

             தமிழ்க்கவி வாழ்க! வாழ்க!

வெள்ளி, 28 நவம்பர், 2014

GOOGLE என்னும் மாய உலகம்

        மாயப் படங்கள்

வலையுலக நண்பர்களே..வணக்கமுங்க..!.ஜாலியா ஒரு பதிவு.!.

google..என்கிற மாய உலகத்தில் நம்மை மிரளவைக்க,நம் புருவங்களை உயரவைக்க,எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன..!.

நான் ரசித்த சில படங்கள்..இதோ..

பார்த்துவிட்டு கமெண்ட் அடிங்கோ..! அது கவிதையாகவோ,நச்சுனு காமெண்டாகவோ இருக்கட்டும்..!.

உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுங்க..!

செவ்வாய், 18 நவம்பர், 2014




கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் 'கம்பன் தமிழும் கணினித்தமிழும்'

ஒரு வாசகனின் பார்வையில்..

   "கிளிக்குப் பச்சைவண்ணம் தீட்டவேண்டுமா?"எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை'தேவையா? அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

செவ்வாய், 4 நவம்பர், 2014

இலக்கியப் புதிர்...

காதலுகாக மதம் மாறிய கவிஞன்.....!!!

"காதலுக்கு மதமுமில்லை;ஜாதியில்லையே
  கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே "என்ற கவியரசரின் பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலுக்காக மதம் மாறுவது என்பது இன்றைக்குப் பெரிய விடயமல்ல. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பதும் பெரிய செய்தியல்ல.கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர், சைவத்திலிருந்து சமணத்திற்கும் பின் சைவத்திற்கும் மாறியது அனைவர்க்கும் தெரிந்ததே..!
ஆனால்,காதலுக்காக ஒரு கவிஞர் மதம் மாறினார் என்பதுதான் அதிசயம்.!

புதன், 22 அக்டோபர், 2014

               வள்ளுவத்தாய்....

  (வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!.. நீ...ண்ட இடைவெளிக்குப் பின் நம் இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது.. 2009இல் நான் எழுதி, காஞ்சிபுரம் மாவட்டம், உலகத் திருக்குறள் பேரவை வெளியிட்ட திருக்குறள்- வாழ்வியல் ஓவியம் என்ற  நூலில் வெளிவந்த கட்டுரையைச் சில மாற்றங்களுடன் வெளியிடுகிறேன்..)
   
                 தீப ஒளித் திருநாளில் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும் வள்ளுவம் பற்றிச் சிந்திப்போம்.. வள்ளுவனை, "தெய்வ

வள்ளுவன் வான்மறை தந்ததும்" என பாரதி பாடியதைப் போலத் 'தெய்வம்' என்பதா? நல்லன சொல்லியும் அல்லனவிலக்கியும் வழி காட்டுவதால் 'ஆசிரியர்' என்பதா?...உணர்வுகளின்,உறவுகளின் உச்சமாக இருக்கிற 'தாய்' என்பதா? 
தெய்வ நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதில்லை.வாழ்வின் முற்பகுதியில் ஆசிரியர்களின் தேவை அவசியம் என்றாலும்,பிற்பகுதியில் (40வயதிற்குப் பின்) ஆசிரியர் நேரடியாக வாழ்க்கையைப் பாதிப்பதில்லை.

புதன், 18 ஜூன், 2014

இலக்கியச் சாரல் .

                                     உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..

 தமிழின் முதல் காப்பியம் மட்டுமல்ல;எண்ணற்ற புதுமைகளை, புரட்சிச் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம். பெயர் வைப்பதில் தொடங்கி, வாழ்த்து, பெண்முதன்மை, காட்சியமைப்பு,
நாடகப் பாங்கு, பாத்திரப் படைப்பு, அறிமுகம் செய்தல், யாப்பு முதலியவற்றில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திப் புரட்சி செய்கிறார் இளங்கோ.
சிலப்பதிகாரத்தில் கதை ஓட்டத்திற்கு, காப்பிய இனிமைக்கு, திருப்பு முனைகளுக்கு உயிருள்ள பாத்திரங்கள் பெறும் இடத்தை விட உயிரற்ற ஓர்அஃறிணைப் பொருள்-ஓர் அணிகலன் பெறும் இடம் சிறப்பானது.

செவ்வாய், 3 ஜூன், 2014

இது கவிதை அல்ல..!

கவிஞர்.குருநாதசுந்தரனாரின் 'நாளையும் நானும்'            கல்விக்கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு......
                   (http://gurunathans.blogspot.in/)

               எந்திரங்களாய்.... 

              (கவிஞர்கள் பொறுத்தருள்க!)

  

இனி
நாம்
இதயமில்லா
எந்திரங்களாய்  
இயங்குவதற்குத்
தயாராவோம்.
உயிர்ப்புள்ள
ரோஜாக்களைப் 
பதியம்போடுவதாய்     
நினைத்து
தொட்டிக்குள் திணித்து
தோட்டத்துச் செடியாக்குவோம்
இதயம் மறந்து
மூளைகளை மட்டும்
முதன்மைப் படுத்துவோம்  
இனி நம் கண்களுக்கு 
எண்ணிக்கை மட்டுமே 
எளிதாய்த் தெரியும் 
அடக்குவோம்,அடங்குவோம்
சுவடிகளுக்குள்ளும் புத்தகங்களிலும் 
புதைந்து போவோம் 
தேர்வுகளைச் சொல்லியே 
தினமும் மிரட்டுவோம்
மருத்துவர்களை,பொறியாளர்களை உருவாக்குவதே
மகத்தான பணியென 
மார்தட்டுவோம்.....
இந்நிலை மாற இனியேனும் முயற்சிப்போம் 
மதிப்பெண்களைத் தாண்டி
மனிதம் வளர்ப்போம்.....

 

வியாழன், 29 மே, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தமிழ் பெற்ற இடம் ஒரு பார்வை

பத்தாம்வகுப்புத் தேர்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. .மாநிலத் தேர்ச்சி 90.7% சதவிகிததிற்கு மேல் .

வியாழன், 22 மே, 2014

நூல் மணம்

        கவிஞர்.கண்ணதாசனின்                                                                    திருக்குறள்                                                                           காமத்துப்பால் உரை ....!!  

காவியத் தாயின் இளைய மகன்.. காதல் பெண்களின் பெருந்தலைவன். கவிஞர்.கண்ணதாசன் காமத்துப் பாலுக்கு உரை எழுதினால் எப்படி இருக்கும்??...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...