புதன், 18 ஜூன், 2014

இலக்கியச் சாரல் .

                                     உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..

 தமிழின் முதல் காப்பியம் மட்டுமல்ல;எண்ணற்ற புதுமைகளை, புரட்சிச் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம். பெயர் வைப்பதில் தொடங்கி, வாழ்த்து, பெண்முதன்மை, காட்சியமைப்பு,
நாடகப் பாங்கு, பாத்திரப் படைப்பு, அறிமுகம் செய்தல், யாப்பு முதலியவற்றில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திப் புரட்சி செய்கிறார் இளங்கோ.
சிலப்பதிகாரத்தில் கதை ஓட்டத்திற்கு, காப்பிய இனிமைக்கு, திருப்பு முனைகளுக்கு உயிருள்ள பாத்திரங்கள் பெறும் இடத்தை விட உயிரற்ற ஓர்அஃறிணைப் பொருள்-ஓர் அணிகலன் பெறும் இடம் சிறப்பானது.

செவ்வாய், 3 ஜூன், 2014

இது கவிதை அல்ல..!

கவிஞர்.குருநாதசுந்தரனாரின் 'நாளையும் நானும்'            கல்விக்கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு......
                   (http://gurunathans.blogspot.in/)

               எந்திரங்களாய்.... 

              (கவிஞர்கள் பொறுத்தருள்க!)

  

இனி
நாம்
இதயமில்லா
எந்திரங்களாய்  
இயங்குவதற்குத்
தயாராவோம்.
உயிர்ப்புள்ள
ரோஜாக்களைப் 
பதியம்போடுவதாய்     
நினைத்து
தொட்டிக்குள் திணித்து
தோட்டத்துச் செடியாக்குவோம்
இதயம் மறந்து
மூளைகளை மட்டும்
முதன்மைப் படுத்துவோம்  
இனி நம் கண்களுக்கு 
எண்ணிக்கை மட்டுமே 
எளிதாய்த் தெரியும் 
அடக்குவோம்,அடங்குவோம்
சுவடிகளுக்குள்ளும் புத்தகங்களிலும் 
புதைந்து போவோம் 
தேர்வுகளைச் சொல்லியே 
தினமும் மிரட்டுவோம்
மருத்துவர்களை,பொறியாளர்களை உருவாக்குவதே
மகத்தான பணியென 
மார்தட்டுவோம்.....
இந்நிலை மாற இனியேனும் முயற்சிப்போம் 
மதிப்பெண்களைத் தாண்டி
மனிதம் வளர்ப்போம்.....

 

Related Posts Plugin for WordPress, Blogger...