சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை
மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேறு; நாம் காணும் உலகம் வேறு. கவிஞர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவதைகளோடு வாழ்கிறார்கள்.வாழ்வின் கடக்க முடியாத் தூரங்களை,துயரங்களைத் தாண்டுவதற்கு, தேவைதைகள் அவர்களுக்குத் துணை புரிகிறார்கள்.