ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016
வழக்குரை காதை .( பகுதி..2)..வழக்கு தொடர்கிறது...
ஏன் பாண்டியன் அப்படிச் செய்தான்..?
பொற்கொல்லன் சொல்லையே உறுதியாக ஏற்று பாண்டியன் கோவலனைத் தண்டித்தது ஏன்.? "வினை விளை காலம்"..அதாவது விதி என்கிறார் இளங்கோ. நுட்பமாகப் பார்த்தால், இளங்கோ என்ற சமணத்துறவிக்கும், ஆளுமைமிக்க கவிஞருக்கும் இடையே உள் நடக்கும் மோதல், காப்பியம் முழுமைக்கும் எதிரொலிக்கிறது. எங்கெல்லாம் கதைப் போக்கில் திருப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்,சமணத்தின் அடிநாதமான 'ஊழ்' வெளிப்பட்டுக் கதையை இயக்குகிறது.அதையும் தாண்டி கவிஞனின் ஆளுமை, சமணக் கோட்பாடுகளை மீறி பெண்மையை உயர்த்துகிறது; புரட்சி செய்யவைக்கிறது.
சிலம்புச் சோலை ..வழக்குரை காதை -ஒரு மீள்பார்வை (பகுதி 1)
சிலம்புச் சோலை
..வழக்குரை காதை..... உடைத்து வெளிவரும் உண்மைகள் ... (பகுதி..1)
முன்னுரை
சங்க காலத்தில் தனிப் பாடல்களில் தவமிருந்த அன்னைத் தமிழை, காவிய மாளிகையில் தனிப்பெரும் பேரரசியாக அமரவைத்த பெருமை இளங்கோவடிகளையே சாரும்!.அன்றைய தமிழ்ச் சமுதாய அரசியலை, கலையுணர்வோடு இயைந்த வாழ்வை, அறவாழ்வின் நாட்டத்தை நாம் அறியத்தரும் காப்பியம் சிலப்பதிகாரம். ஆங்கில அறிஞர் டிக்கென்ஸ்,THE TALE OF TWO CITIES' என்று ஒரு நூல் எழுதியிருப்பார்.ஆனால் ,அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூன்று நகரங்களின் கதையை ( முப்பது காதைகள் வழியே) தந்தவர் நம் இளங்கோ. முப்பது காதைகளில் காவியத்தின் இதயமாக இருப்பது 'வழக்குரை காதை'ஆகும். இருபதாவது காதையான ' வழக்குரை காதை'பற்றி இங்கு காண்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)